ஆக்லாந்து டெஸ்டில் திடீர் திருப்பம்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!
, சனி, 8 பிப்ரவரி 2014 (13:21 IST)
ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு சுருண்டு போக 301 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நியூசீலாந்து பாலோ ஆன் கொடுத்து இந்தியாவை நசுக்காமல் தாங்களே மீண்டும் விளையாடக் களமிறங்கி 105 ரன்களுக்குச் சுருண்டனர்.
தோனியின் பீல்டிங் உத்தி இந்த முறை சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சில் தீவிரம் கூடியிருந்தது. இதனால் உணவு இடைவேளையின் போதே நியூசீலாந்து 15/4 ஆனது. முதல் இன்னிங்ஸில் கேன் வில்லியம்சிற்கு கேட்ச் விட்ட முரளி விஜய் இந்த இன்னிங்ஸில் மெக்கல்லமிற்கு கேட்ச் விட்டார். ஆனால் ஜடேஜா அபாரமான பீல்டிங் மற்றும் த்ரோவில் அவரை ரன் அவுட் செய்தது திருப்பு முனையாகும்.