பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவுகளை புதுப்பித்துக் கொள்ள இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதர் கிலானி.
இந்த நிலையில் ஒரு குறுகிய கால ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றை விளையாடலாம் என்று பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது.
ஆனால் இந்தத் தொடர் எப்போது விளையாடப்ப்டும் என்பது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
ஐ.சி.சி. எதிர்காலச் சுற்றுப்பயணத் திட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடப்பட்டுள்ளது.