கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலி..

Arun Prasath
புதன், 26 பிப்ரவரி 2020 (20:00 IST)
கொரோனா வைரஸால் பிரான்ஸ் நாட்டில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் மட்டுமே 2,700 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் இத்தாலி நாட்டில் 11 பேரும், ஈரான் நாட்டில் 15 பேரும், தென் கொரியா நாட்டில் 11 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கொரோனா பாதிப்பால் 60 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் பிரான்சில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று வேளை உணவை விட இது ரொம்ப முக்கியம்.. ஆரோக்கியம் குறித்த டிப்ஸ்..!

சர்க்கரை நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய ஏ.ஐ. ஆய்வு!

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

அடுத்த கட்டுரையில்
Show comments