நிம்மதி என்பது எங்கே இருக்கிறது?: இயேசு

Webdunia
ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு குருவை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மனநிம்மதியே இல்லை என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான். குருவே! வடக்குப் பக்கம் பாருங்கள், அதோ அங்கே தெரிகிறதே, தூரத்தில் ஒரு பனமரம், அது வரையும் என்னோட இடம்தான். நான்தான் கவனித்து  கொள்கிறேன்.
இந்த சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. யாரையும் ஏமாற்றி மிரட்டி அபகரித்தது அல்ல. இத்தனை வசதிகள் இருந்தாலும் எனக்கு நிம்மதி  இல்லாமல் இருக்கு குருவே என்றான். குரு அவனை அமைதியாகப் பார்த்தார். எல்லா இடங்களிலும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய்.
 
இங்கே சொத்து சேகரித்து வைத்திருக்கிறாயா? என்று அவன் நெஞ்சைக் சுட்டி காட்டினார். பணக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்பு, பாசம், நட்பு போன்ற  நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் நிம்மதி தரும் என்றார் குரு. நிம்மதி சொத்துக்களில் இல்லை.
 
சுயநலம் அல்லது அகந்தையை அழிக்கும் எந்த செயலும் நற்செயல் ஆகும். மனிதனை மென்மேலும் சுயநலத்தில் மூழ்கடிக்கும் எந்தத் தீய செயல்களும் சுயநலம், நற்பெருமை மற்றும் கர்வத்திலிருந்து தோன்றும். நான் எனது என்ற கர்வத்திலிருந்து தோன்றும். நான் எனது என்ற எண்ணத்தை அழித்தவன் உயரிய பூரணத்துவ நிலையை அடைகிறான். அகந்தை அல்லது சுயநலத்தை அழித்துவிட்டால் நாம் அமரத்துவம் மற்றும் நிலையான பேரானந்த நிலை என்ற  எல்லையற்ற சாம்ராஜ்யத்தை அடைய முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கன்னி ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: தடைகளைத் தாண்டித் தடம் பதிக்கும் ஆண்டு!

சிம்மம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: தடை நீங்கி தலை நிமிரும் ஆண்டு!

மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளில் தனலட்சுமி அலங்காரம்

கடகம் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2026: குழப்பங்கள் நீங்கி குபேர யோகம் தரும் ஆண்டு!

மகரவிளக்கு திருவிழாவிற்காக சபரிமலை கோவில் திறப்பு.. ஜனவரி 20-ஆம் தேதி நடை அடைக்கப்படும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments