விடுகதைகள் தெரிந்து கொள்வதும், அதனை நண்பர்களிடம் கேட்பதும் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தானே?
1. தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். அவர்கள் யார்? 2. கறுப்பு மைதானத்தில் கொளுத்தும் சூட்டிலும் புரண்டு புரண்டு தூங்குது வெள்ளைக் குதிரை. அது என்ன? 3. அழைக்காமல் வரும் விருந்தாளி; ஆளை அலைக்கழிக்காமல் செல்லமாட்டான். அவன் யார்? 4. ஊரெல்லாம் மூடியிருக்கும்; ஊறுகாய் பானை திறந்தே இருக்கும். அது என்ன? 5. சின்னச் சின்ன சாத்தான்; வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்? 6. மாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். அது என்ன? 7. ஆற்றில் விழுந்தாலும் ஆழ்கடலில் விழுந்தாலும் எரிந்து கொண்டே இருப்பான். அவன் யார்?
விடைகள்:
1. பால், தயிர், நெய் 2. தோசைக்கல், தோசை 3. நோய் 4. கிணறு 5. பருத்தி 6. சிலந்தி வலை 7. சூரிய ஒளி