வெடிகுண்டு சம்பவத்தில் சிதறிய தீவிரவாதியின் குழந்தை பற்றி தமிழக முதலமைச்சர் கருணாநித ியின் உருக்கமான கவிதை
விண் முட்டும் மாளிகைகளை வியந்து நோக்கியவாறு - வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு நடக்கிறாள் அந்த நங்கை.
குழந்தை அவள் இடுப்பில் இருந்தவ ாறு வீதியோரத்துக் கடைகளில் அழகுற அடுக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொம்மைகள் மீது விழியோட்டி - விரலையும் நீட்டி - " அதோ! அதோ! அதை வாங்கிக் கொடு!'' என்று பிடிவாதம் செய்கிறது.
" அப்பா நாளைக்கு வந்து விடுவார், வந்தவுடனே வாங்கித் தருவார்; இப்போ வாயை மூடிக்கிட்டு இரு'' என்று அந்த இளந்தாய் கண்டிப்பான குரலில் - கனிவும் கலந்து; " கண்ணு இல்லே! இப்ப அடம் பிடிக்காம சும்மா இரு!'' குழந்தை சமாதானம் அடைவதற்குப் பதில் கோபம் கொள்கிறது!
குழந்தையின் கோபம் அழுகையில்தானே கொண்டு போய் விடும்! அழுகிறது - அம்மா அரவணைப்பு பலிக்கவில்லை! அதட்டலும் எடுபடவில்லை. வீறிட்டு அலறுகிறது - அந்த வீதியே அதிரும் அளவுக்கு அலறுகிறது. அம்மாவுக்கு கோபம் தாங்கவில்லை.
குழந்தையை வீதியிலே இறக்கி விட்டு; " இங்கேயே நின்னு அழு; நாளைக்கு உங்க அப்பன் வரும் வரையில் அழுதுகிட்டே இரு! அவர் வந்து பொம்மை வாங்கிக் கொடுப்பார்'' ஆத்திரம் பொங்கிட அம்மா நடக்கத் தொடங்கினாள்! " ஆபத்து! ஆபத்து! அந்தப் பக்கம் போகாதீர்கள்! போகாதீர்கள்! தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு அங்கேதான் இருக்கிறது!'' ஒலிபெருக்கியில் அந்த எச்சரிக்கை முழங்கிடவே;
அந்த இளந்தாய், ஒலி வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். தீயை மிதித்தது போல் ஓர் அதிர்ச்சி; - வெள ிய ூருக்குப் போவதாக விடைபெற்றுச் சென்ற கணவன் ; " திரும்பும் போது தீவிரவாதியாகத் திரும்புவேன்'' என்று முரட்டுக் கர்ச்சனை செய்தது இப்போது அவள் மூளையைக் கலக்கிற்று.
நினைவுத் தடத்திலிருந்து அவள் மாறுவதற்குள் - பயங்கர சப்தம்! இடி முழக்கம்! மின்னல் போன்ற தாக்குதல்! அந்த வீதியே மனித உடல்களால் - அதுவும் சிதைந்த உடல்களால் நிரம்பியது - வீதியோரத்துக் கடைகள் எரிந்து கொண்டிருந்தன - இளந் தாய் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
விளையாடுவதற்கு பொம்மை கேட்டு அழுத குழந்தை வெடித்துச் சிதறி; அந்தத் தாயின் மீது ரோஜா இதழ்களைப் போல உதிர்ந்து கிடந்த காட்சியை; அங்கு ஓடிவந்த ஒருவன் உற்றுப் பார்த்தான் - " ஓ''வெனக் கதறினான் - ஆம்; அவன்தான் வெள ிய ூர் சென்றிருந்த அவள் கணவன்! அந்தக் குழந்தையின் தந்தை - தீவிரவாதிகளுடன் திட்டம் தீட்டி விட்டு; அந்தத் திட்டத்தை இப்போது நிறைவேற்றி விட்டான் - குழந்தையின் சிதறிய உடலும் - அவன் மணந்த அந்தக் கோகிலத்தின் முகமும் - " இப்போது திருப்தி தானே!'' என்று அவனைப் பார்த்துக் கேட்பது போல இருந்தது!