Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு சிறார்கள்

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (15:56 IST)
மலேசியாவில் உள்ள ஜோகூர் என்ற மாகாணத்தில் சுமார் 8 சிறார்கள் ஒரு பேருந்தை திருடி அதில் சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சாலையில் சிறுவன் ஒருவன் பேருந்தை ஓட்டிச் செல்வதை பார்த்த காவலர் ஒருவர் பேருந்தை மடக்கிப் பிடித்து நிறுத்தினார். அதில் இருந்த சிறுவர்கள் பேருந்தை விட்டு ஓடத் துவங்கினர்.

காவலரும் விடாமல் அவர்களை துரத்திச் சென்று பிடித்து விசாரணை செய்தார்.

விசாரணையில், அந்த சிறுவர்கள் விளையாட்டிற்காக ஒரு பேருந்தை திருடியதாகவும், பின்னர் அதில் சுற்றுலா போன்று பல இடங்களுக்குச் செல்ல தீர்மானித்ததாகவும் கூறியுள்ளனர்.

அந்த 8 சிறார்களுக்கும் 11 முதல் 14 வயதுதான் இருக்கும். பேருந்தை ஓட்டிய சிறுவனுக்கு 13 வயதுதான் ஆகிறதாம்.

வேண்டாமே விபரீத விளையாட்டு

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments