Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உங்களை மாற்றுங்கள்; உலகத்தை அல்ல;
Webdunia
திங்கள், 15 நவம்பர் 2010 (16:36 IST)
நிறைய பேர் உலகம் இப்படி இருக்கிறதே, மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்று புலம்புவார்கள். இவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ, இவர்கள் எப்படித்தான் திருந்துவார்களோ என்று கூறுவார்கள். ஆனால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதுதான் சிறந்தது.
இதற்கு உதாரணமாக ஒரு கதையை உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் மங்கலாபுரி என்ற நகரத்தை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன், ஒரு நாள் வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா சென்றான். அந்த நாட்களில் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பல இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியதாயிற்று.
தனது பயணத்தை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு வந்த மன்னன், தன் கால்களில் கடுமையான வலியை உணர்ந்தான். இதுதான் அவன் அதிகமான தூரம் நடந்து சென்ற முதல் பயணம் என்பதாலும், அவன் சென்று வந்த பகுதிகள் பல கரடுமுரடாக இருந்ததாலும் கால்வலியை அவனால் தாங்கவே முடியவில்லை.
இந்த நிலையில், மன்னன் ஒரு ஆணையிட்டான். அதாவது, "இந்த நகரம் முழுவதும் உள்ள அனைத்து சாலைகளையும் விலங்கின் தோலை கொண்டு பரப்பி விட வேண்டும்" என்பதாகும்.
இதனை நிறைவேற்றுவதற்கு ஏராளமான விலங்குகளை கொல்ல வேண்டி வரும், மேலும் இதற்கு ஏராளமான பணம் செலவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
WD
இதனை உணர்ந்த மன்னனின் பணியாளர் ஒருவர், மிகுந்த பணிவுடன் மன்னனிடம் சென்று, நீங்கள் கூறியபடி, நகரம் முழுவதையும் தோலால் பரப்பினால் ஏராளமான பொருட்செலவாகும். உங்கள் ஒருவருக்காக இப்படி நகரத்தையே மாற்றுவது தேவையில்லாத செலவினம். அதற்கு பதிலாக நீங்கள் மிகவும மிருதுவான ஒரு தோலைக் கொண்டு காலணி செய்து கொள்ளலாமே என்று ஆலோசனைக் கூறினான்.
ஆச்சரியத்தில் மூழ்கிய மன்னன், இறுதியாக தனது பணியாளரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தனக்காக ஒரு காலணியை தயாரிக்க சொன்னான்.
இது வெறும் கதையல்ல. நம் வாழ்க்கைக்குத் தேவையான ஒரு தகவல். அதாவது, இந்த பூமியை மிகவும் மகிழ்ச்சியான உலகமாக நாம் மாற்றிக் கொள்ள முடியும், அதற்காக நாம் நம்மைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டுமேத் தவிர, இந்த உலகத்தை அல்ல என்பதுதான் அது.
என்ன குழந்தைகளா கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?
குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...
குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வைரம் இப்படிதான் கிடைக்கிறது
Show comments