Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளி பிடித்திருந்தால்...

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (15:21 IST)
குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான விஷயம். ஏன், எப்படி சளி பிடிக்கும் என்றேக் கூற முடியாது.
 
எனினும் சளியைக் கட்டுப்படுத்த சிறந்த கை வைத்தியம் உள்ளது-
 
பல வீடுகளில் தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் கற்பூரவல்லிச் செடி தான் அந்த மாமருந்து. கற்பூரவல்லி இலைகள் பார்ப்பதற்கு தடிமனாகவும், மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.
 
உங்கள் குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். 
 
அந்த நீரை மட்டும் குழந்தைகளுக்கு பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments