குழந்தைகள் பயன்படுத்தும் துணிகள் என்றால் அதில் அவர்களுக்கு உடுத்தும் ஆடைகள் முதல், அவர்களை படுக்க வைக்கப் பயன்படுத்தும் துணிகள் வரை அனைத்தும் பொருந்தும்.
குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் அனைத்துத் துணிகளையும் வாரத்தில் ஒரு முறையாவது சுடுதண்ணீரில் போட்டு துவைப்பது நல்லது.
குழந்தைகளுக்குப் பயன்படுத்திய துணிகளை தினமும் துவைக்க வேண்டும். பொதுவாக வெள்ளை நிறத்திலானா படுக்கை துணிகளைப் பயன்படுத்துவது நல்லது.
கிருமி நாசினியை துவைக்கும் போது பயன்படுத்துவது குழந்தையின் உடல்நிலைக்கு நல்லது. ஆனால், கிருமி நாசினியை தண்ணீரில் கலந்து அதில் துணியை அலசி பிறகு மீண்டும் வெறும் தண்ணீரில் துணியை அலசுவது குழந்தையின் சருமத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தாமல் பாதுகாக்க உதவும்.