Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கோடிக்கு வாங்கப்பட்ட சஜித் நடியட்வாலாவின் மூன்று படங்கள்

Webdunia
சனி, 27 செப்டம்பர் 2014 (10:21 IST)
பிரபல தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலாவின் மூன்று படங்களை 200 கோடிக்கு யுடிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சஜித் நடியட்வாலாவின் தயாரிப்பில் விரைவில் ஹவுஸ்ஃபுல் 3 தொடங்கப்பட உள்ளது. இதனை இப்போதே 100 கோடிக்கு ஈரோஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

அதேபோல் சைஃப் அலிகான், கத்ரினா நடித்து வரும் பேண்டம், ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடித்து வரும் தமாஷா, சபீர் கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப் நடிக்கும் புதிய படம் என மூன்று படங்களை யுடிவி 200 கோடிக்கு வாங்கியுள்ளது. 
 
200 கோடி என்பது மினிமம் கியாரண்டி. அதற்கு மேல் வரும் லாபத்தை இரு தரப்பும் பங்கிட்டு கொள்ளும் என தெரிகிறது.
 
தயாரிப்பாளராக இருந்த சஜித் நடியட்வாலா இந்த வருடம் வெளியான சல்மான் கானின் கிக் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments