Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது

ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது
, வியாழன், 9 அக்டோபர் 2014 (10:45 IST)
நடிகர் ஷாருக்கானுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை பிரிட்டன் அரசாங்கம் அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. 
 
குறிப்பிட்ட துறைகளில் புகழ் வாய்ந்தவர்களுக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை பிரிட்டன் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷேக் ஹசீனா உள்ளிட்டோர்கள் இந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். ஐஸ்வர்யாராய் இந்த விருதை வாங்கியிருப்பதிலிருந்து விருதின் முக்கியத்துவத்தை ஏகதேசமாக பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். 
 
சினிமாத்துறையில் தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருவதற்காக உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது இந்த வருடம் ஷாருக்கானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பாராளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ் இந்த விருதை ஷாருக்கானுக்கு அளித்தார். 
 
சில தினங்கள் முன்பு ஷாருக்கான் இன்டர்போலின் அதிகாரப்பூர்வ தூதராக அறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil