Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமா கொட்டும் பஜ்ரங்கி பைஜானுக்கு சீக்வெல்...?

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2015 (14:30 IST)
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை பஜ்ரங்கி பைஜான் இந்தியாவில் 314.04 கோடிகளை வசூலித்துள்ளது. 75 கோடிகளில் தயாரான படம் இன்னும் தனது வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. உலகம் முழுவதும் சேர்த்து படத்தின் வசூல், 470.73 கோடிகள்.
 

 
இந்த அசாதாரண வசூல் காரணமாக, பஜ்ரங்கி பைஜானின் இரண்டாவது பாகத்தை எடுக்கலாமா என்ற யோசனை உதித்துள்ளது இயக்குனர் கபீர் கானுக்கு.
 
பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய கதைதான் பஜ்ரங்கி பைஜான் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் சிறுமியை பத்திரமாக அவளது வீட்டில் சேர்க்கும் இந்திய இளைஞனின் கதை என்பதால் பாகிஸ்தானிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. இந்தியா - பாகிஸ்தான் என்றதுமே படத்துக்கு ஒரு பிரமாண்டம் வேறு கிடைத்துவிடுகிறது. ரசிகர்களின் உணர்ச்சி நிலையை உச்சத்துக்கு தூண்டவும் முடியும்.
 
அதனால், இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்ற யோசனை படம் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுந்துள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments