Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பணமா கொட்டும் பஜ்ரங்கி பைஜானுக்கு சீக்வெல்...?

பணமா கொட்டும் பஜ்ரங்கி பைஜானுக்கு சீக்வெல்...?
, சனி, 15 ஆகஸ்ட் 2015 (14:30 IST)
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை பஜ்ரங்கி பைஜான் இந்தியாவில் 314.04 கோடிகளை வசூலித்துள்ளது. 75 கோடிகளில் தயாரான படம் இன்னும் தனது வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. உலகம் முழுவதும் சேர்த்து படத்தின் வசூல், 470.73 கோடிகள்.
 

 
இந்த அசாதாரண வசூல் காரணமாக, பஜ்ரங்கி பைஜானின் இரண்டாவது பாகத்தை எடுக்கலாமா என்ற யோசனை உதித்துள்ளது இயக்குனர் கபீர் கானுக்கு.
 
பத்திரிகையில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து இயக்குனர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதிய கதைதான் பஜ்ரங்கி பைஜான் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் சிறுமியை பத்திரமாக அவளது வீட்டில் சேர்க்கும் இந்திய இளைஞனின் கதை என்பதால் பாகிஸ்தானிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. இந்தியா - பாகிஸ்தான் என்றதுமே படத்துக்கு ஒரு பிரமாண்டம் வேறு கிடைத்துவிடுகிறது. ரசிகர்களின் உணர்ச்சி நிலையை உச்சத்துக்கு தூண்டவும் முடியும்.
 
அதனால், இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்ற யோசனை படம் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil