Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலைக்குமேல் கத்தி தொங்கும்போது காமெடிக் காட்சியில் நடிக்க வேண்டியிருக்கு - சல்மான் கான் வேதனை

தலைக்குமேல் கத்தி தொங்கும்போது காமெடிக் காட்சியில் நடிக்க வேண்டியிருக்கு - சல்மான் கான் வேதனை
, செவ்வாய், 3 நவம்பர் 2015 (12:54 IST)
சல்மான் கான் தன்மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகவும், வேதனையாகவும் பேசியுள்ளார்.


 
 
குடிபோதையில் சல்மான் கான் கார் ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு, மானை கொன்றது, அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது என மூன்று வழக்குகள் சல்மான் கான் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், சினிமாவில் காமடிக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கிறது, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த வேண்டியுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார், சல்மான் கான்.
 
எவ்வளவு நல்லது செய்தாலும், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல், என்னுடைய வழக்குகள் பற்றித்தான் பேசுகிறார்கள். அவனைப்பார் கோர்ட்டில் வழக்குகள் உள்ளன. இருந்தாலும், சோனம் கபூரோடு காதல் காட்சியில் நடிக்கிறான். ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் டான்ஸ் ஆடுறான். ஷூட்டிங்குக்காக போலந்து நாட்டுக்கு போறான். 600 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான் என்று ஈவிரக்கமில்லாமல் பேசுகிறார்கள்.
 
இதுவெல்லாம், முற்றிலுமாக எனக்கு எதிராக அமைந்துள்ளது. எங்கள் கையில் மிச்சமாக என்ன இருக்கிறது என்று யாருமே பார்ப்பதில்லை. என்னுடைய நல்ல செயல்கள் எதுவுமே எடுபடாமல் போய்விடுகின்றது என்று சல்மான் கூறியுள்ளார்.
 
சல்மான்... உங்கள் கார் சக்கரத்தில் மாட்டி உயிர் இழந்தவரையும், அவரது குடும்பத்தினரையும் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு முன்னால் உங்களுடையது ஒரு பிரச்சனையே இல்லை என்பது தெரிய வரும்.

Share this Story:

Follow Webdunia tamil