Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனே - ரன்வீர்சிங்கிற்கு நவம்பரில் திருமணம்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (12:35 IST)
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தீபிகா படுகோனேவுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் வரும் நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், இவர் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசலுடன் சேர்ந்து xxx என்ற படத்திலும் நடித்துள்ளார்.
 
இவரும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனான ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. பிறகு பத்மாவத் படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது அவர்களுக்கு நெருக்கம் அதிகமானதாக பேசப்படுகிறது. இவர்களும் விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என அனைத்திற்கும் ஒன்றாக சென்று வருகின்றனர்.
இதனால் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் எப்போது நடக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
 
இந்நிலையில் அவர்களது திருமணம் வருகிற நவம்பர் 19-ந் தேதி நடைபெற உள்ளதாகவும், திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

அடுத்த கட்டுரையில்
Show comments