Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகா படுகோன்

ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகா படுகோன்

ராணி பத்மினியாக நடிக்கும் தீபிகா படுகோன்
, வியாழன், 12 மே 2016 (12:57 IST)
சரித்திர படமான பாஜிராவ் மஸ்தானியின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு சரித்திர கதையை படமாக்குகிறார் சஞ்சய் லீலா பன்சாலி.


 


ராணி பத்மினியின் வாழக்கை வரலாறை அவர் இந்தமுறை படமாக்குகிறார்.
 
ராணி பத்மினியின் கணவர் ரத்தன் சிங் போரில் அலாவுதீன் கில்ஜியால் தோல்வியடைந்த பிறகு, ராணி பத்மினியின் அன்பைப் பெற அலாவுதீன் மேற்கொண்ட முயற்சிகளை பின்னணியாக வைத்து இந்தப் படம் தயாராகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த சரித்திரப் படத்தில் ராணி பத்மினியாக நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனை அணுகியுள்ளார். 
 
ஆனால், இதுவரை தீபிகா தனது சம்மதத்தை கூறவில்லை. பாஜிராவ் மஸ்தானியில் தீபிகாவுடன் நடித்த ரன்வீர் சிங்கும் இந்தப் புதிய படத்தில் இருக்கிறார். ஆனால், அவரது வேடம் என்ன என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
விரைவில் படப்பிடிப்பை தொடங்கி டிசம்பர் 15, 2017 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஷ் அவுட்டான சன்னி லியோனின் ஒன் நைட் ஸ்டேன்ட்