இந்திப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு வசதியாக மும்பையில் வீடு வாங்கினார் தனுஷ்.
தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனா இந்திய திரையரங்குகளில் அறுபது கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. படத்தின் ஆடியோ உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு வசூல் அனைத்தும் சேர்த்து 100 கோடிக்கு மேல் வசூலானது.
அதனைத் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்தார். பெயர் கிடைத்த அளவுக்கு இந்தப் படம் பணம் வசூல் செய்யவில்லை. ஆனாலும், தனுஷுக்கு இந்தியில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன.
முக்கியமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய் மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்திப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு வசதியாக மும்பை அந்தேரி பகுதியில் தனுஷ் வீடு வாங்கியுள்ளார். இது சினிமா நட்சத்திரங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.