Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மாவத் படத்திற்கு தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (11:57 IST)
தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாக இருக்கும் பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்திருக்கும் 'ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பத்மாவத்' திரைப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. கடந்த வருடம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம் கடும் எதிர்ப்புகளால், ரிலீஸ் தேதி ஒத்து வைக்கப்பட்டது. மேலும் பத்மாவதி என்ற பெயர் பத்மாவத் என்று மாற்றம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில் பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாதென்றும் திட்டமிட்ட படி வரும் 25ஆம் தேதி பத்மாவத் திரைப்படம் நாடு முழுக்க வெளியிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments