Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (12:53 IST)
பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா டகுபதி, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்றிருந்த நிலையில், பாகுபலி 2 படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமில்லாமல் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
 
இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த அதிகாரத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜீனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமௌலி இப்படத்தை இயக்க உள்ளார். டிவிவி எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
நடிகர்கள் மற்றும் இயக்குனரின் பெயர்கள் R இல் ஆரம்பிப்பதால் இப்போதைக்கு இப்படம் RRR என சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. மேலும் படம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யாவுக்கு சொன்ன கதையை அமீர்கானை வைத்து இயக்குகிறாரா லோகேஷ்?

தள்ளிப் போகும் பிரேமலு 2 ஷூட்டிங்… ரிலீஸ் திட்டம் இதுதான்!

காதலியைக் கரம்பிடித்தார் ‘டிமாண்டி காலணி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து!

கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி’ படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் நிலவரம் என்ன?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments