Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதி மீறி கட்டிடம் கட்டிய நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு நோட்டீஸ்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (07:59 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா விதிமீறி கட்டிடம் கட்டிய வழக்கில் மாநகராட்சி நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி, இன்றைக்கு  ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். அத்துடன், பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குவாண்டிகோ என்ற அமெரிக்கன் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். 
இந்நிலையில் மும்பையில் அவருக்கு சொந்தமான வணிக வளாகத்தின் அருகில், அவர் விதியை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது அவர் விதியை மீறி கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. 
 
இதையடுத்து அது குறித்து விளக்கமளிக்க பிரியங்கா சோப்ராவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வீர தீர சூரன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

வில்லன் ஆகிறாரா ஜீவா?… கார்த்தி 29 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கோட்டை விட்ட கேம்சேஞ்சர்… வசூல் மழைப் பொழியும் வெங்கடேஷ் படம்.. 200 கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments