ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், கவலைக்கிடமான நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ஐஸ்வர்யா சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அழுது கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் அழகு நாயகன் சல்மான் கான் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் காதல் கதை தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்தது அனைவருக்கும் தெரியும். சல்மான் உனக்கு வேண்டாம், சரிபட்டு வர மாட்டார் என்று அவருக்கு அறிவுரை வழங்கியது கிருஷ்ணராஜ் ராயாம்.
அபிஷேக் பச்சன் தன்னை விட வயதில் சிறியவர் என குழம்பிய நிலையில் அவரை மணப்பதா, வேண்டாமா என்று ஐஸ் யோசித்தபோது அவரை திருமணம் செய்யுமாறு அறிவுரை கூரியது அவருடைய தந்தை கிருஷ்ணராஜ் தானாம். ஐஸ்வர்யா தனது தந்தையின் செல்லமாம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவாராம்.
திருமணத்திற்கு பிறகும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தந்தையிடம் அறிவுரை கேட்பாராம். ஐஸ்வர்யா ராய்க்கு தந்தையாகவும், நல்ல தோழன் மற்றும் வழிகாட்டியாக இருந்து வருபவர் கிருஷ்ணராஜ் ராய் தானாம்.