Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலைக்கா அரோராவின் திருட்டு காதல்

மலைக்கா அரோராவின் திருட்டு காதல்

மலைக்கா அரோராவின் திருட்டு காதல்
, வியாழன், 12 மே 2016 (11:56 IST)
மலைக்கா அரோராவும், அவரது கணவர் அர்பாஸ் கானும் பிரிவது என்று முடிவு செய்துள்ளனர். குழந்தைகள் பிறந்து, தாம்பத்தியம் தடுமாற்றமில்லாமல் சென்று கொண்டிருந்த போது, இந்த திடீர் விவாகரத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்த விலகலுக்கு முக்கிய காரணம் மலைக்கா அரோராவின் திருட்டு காதல் என்று கூறப்படுகிறது. 
 
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவிக்குப் பிறந்தவர் அர்ஜுன் கபூர். பாலிவுட்டின் வளர்ந்துவரும் இளம் நடிகர். அவருக்கும், மலைக்கா அரோராவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  பல இடங்களில் இவர்களை ஒன்றாகப் பார்த்தவர்களிருக்கிறார்கள். அர்பாஸ் கானின் குடும்பத்தாரால் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை. போனி கபூரும் தந்து மகனை கண்டித்துள்ளார். ஆனால், அர்ஜுன் கபூர் கேட்பதாக இல்லை. 
 
கடைசியில் சல்மான் கான் என்ற அஸ்திரத்தை பிரயோகித்த பிறகே அர்ஜுன் கபூருக்கு தனது இல்லீகல் இன்பத்தின் ஆபத்து புரிந்திருக்கிறது.
 
மலைக்காவின் கணவர் அர்பாஸ் கான் நடிகர் சல்மான் கானின் உடன்பிறந்த சகோதரர். அதாவது சல்மானின் அண்ணிதான் மலைக்கா. அவரது வீட்டில் கைவைத்தால் அர்ஜுனின் கரியரையே கேள்விக்குள்ளாக்கும் ஸ்டார் பவர் கொண்டவர் சல்மான். இந்த விஷயத்தை விளக்கிய பிறகு, கடந்த இரண்டு வாரங்களாக மலைக்காவைவிட்டு, ஆதித்ய ஷெட்டியுடன் சுற்ற ஆரம்பித்துள்ளார் அர்ஜுன் கபூர்.
 
ஆனாலும், மலைக்காவும், அர்பாஸ் கானும் பிரிவது உறுதியாகியிருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க கொள்ளை அடிப்போம், நீங்க மட்டும் நேர்மையா இருக்கணும்