Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சாடிய சன்னி லியோன்

கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சாடிய சன்னி லியோன்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (11:05 IST)
கேரள அரசு தெருநாய்களை பிடித்து கொல்வதற்கு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு.


 

 
லட்சுமிராய், த்ரிஷா, ரஞ்சனி ஹரிதாஸ் போன்றவர்கள் தங்களின் கண்டனத்தை ஏற்கனவே பதிவு செய்து, அடுத்த வேலையை பார்க்க போய்விட்டனர்.
 
என் வீட்டிலும் ரெண்டு நாய்கள் இருக்கு என்று, நாய் பாதுகாப்பு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு நாய்க்கு ஜே போட்டார் விஷால்.
 
தெருநாய்கள் நடிகை சன்னி லியோனின் ஆதரவையும் இப்போது கைப்பற்றியுள்ளன. "தெருநாய்களும் ஒரு உயிர்தானே? அவைகளை கொன்றால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம்? தெருநாய்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை" என்று கூறியுள்ளார் சன்னி லியோன்.
 
யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். உம்மன் சாண்டி அரசு தெருநாய்களை கொல்வது தெருவாசிகளுக்காக இல்லை, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க என்ற உண்மையை சன்னி லியோனால்தான் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. 
 
எம்.எல்.ஏ, எம்.பி.ன்னு நீங்க ஏன் முயற்சிக்கக் கூடாது?

Share this Story:

Follow Webdunia tamil