கஜோலை பார்த்தால் பயப்படும் நடிகை
கஜோலை பார்த்தால் பயப்படும் நடிகை
அஜய் தேவ்கனின் ஷிவாய் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி ரிலீசாக உள்ளது.
அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் எரிகா கார். சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் எரிகா கூறியதாவது, “எனக்கும் அஜய் தேவ்கனுக்கும் நல்ல பொருத்தம் உள்ளது. ஆனால் கஜோலை பார்த்தால் தான் பயமாக உள்ளது. உண்மையில் அஜயை விட கஜோல் தான் என்னை ரொம்பவும் மிரள வைக்கிறார். நான் அஜய்யுடன் இருக்கையில் ரொம்ப சகஜமாக இருக்கிறேன்.
ஆனால் கஜோலுடன் இருக்கும் போது ரொம்பவே மரியாதையாக நடந்து கொள்ள முயற்சிக்கிறேன். அவருடன் அதிகம் பேச மாட்டேன். எனக்கு கஜோல் பற்றி தெரியும். அவர் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். போலந்தில் போய் கஜோல் பற்றி கேட்டால், அங்கிருக்கும் மக்கள் உற்சாகத்தில் சத்தமிட துவங்கி விடுவார்கள். கஜோல் மீது இருக்கும் மரியாதையே அவர் மீது அதிக பயத்தையும் ஏற்படுத்துகிறது.” என்றார்.