Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளை கொலை செய்யும் கதாபாத்திரம் - குதூகலமாக நடிக்கப் போகும் ராக்கி சாவந்த்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2015 (09:03 IST)
சர்ச்சையையும், சின்ன கச்சையையும் நம்பி இந்தி சினிமாவில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.


 

 
வண்டிக்கு பூஸ்ட் தரும் விஷயம் எங்கு கிடைத்தாலும் லபக்கிக் கொள்வது சாவந்தின் வழக்கம். அப்படி சிக்கியிருக்கிறது, இந்திராணியின் கதை.
 
மகள் ஷீனாவை கொலை செய்த வழக்கில் கம்பிக்குப் பின்னே தள்ளப்பட்டிருக்கிறார் இந்திராணி. அவரது கதையை படமாக எடுக்கப் போவதாகவும், இந்திராணியின் கதாபாத்திரத்தில் தானே நடிக்க யிருப்பதாகவும் ராக்கி சாவந்த் அறிவித்துள்ளார்.
 
இந்திராணியை ராக்கி சாவந்துக்கும் தெரியும். அவரது சேனலில் ராக்கி நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். "ஷீனா இந்திராணியின் மகள் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
 
அவரை இந்திராணியின் தங்கை என்றுதான் நினைத்திருந்தேன். ஷீனாவும் இந்திராணியை அக்கா என்றுதான் அழைப்பார். அவர்களைப் பற்றி முழுவதும் எனக்குத் தெரியும். அதை கதையாக எழுதியுள்ளேன். அதை நானே படமாக்கப் போகிறேன்" என ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!