Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணல் புயலில் சிக்கிய அனுஷ்கா சர்மா

மணல் புயலில் சிக்கிய அனுஷ்கா சர்மா
, ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (16:40 IST)
அனுஷ்கா சர்மா திரையுலகில் நுழைந்து ஆறு வருடங்களாகிறது. நடித்து வெளிவந்த படங்கள் ஏழு. எட்டாவது படம், என்ஹெச்10 அனுஷ்கா சர்மாவின் சொந்தத் தயாரிப்பு.
முன்னணி நடிகர்களின் விருப்பப்பட்டியலில் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர் வீராத் கோலியின் நெருக்கப் பட்டியலிலும் அனுஷ்கா சர்மா இருக்கிறார். தற்போது என்ஹெச்10 படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இவருடன் தயாரிப்பில் கைகோர்த்திருப்பது அனுராக் காஷ்யபின் பாண்டம் ஃப்லிம்ஸ்.
 
இந்த கூட்டணி அமைய காரணம் காஷ்யபின் பாம்பே வெல்வெட். இந்தப் படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இந்த நட்பில் பாண்டம் ஃபிலிம்ஸுடன் அனுஷ்கா சர்மாவின் க்ளீன் ஸ்லேட் ஃப்லிம்ஸ் இணைந்துள்ளது.

என்ஹெச்10 ஒரு த்ரில்லர். பெரும்பகுதியை ராஜஸ்தானில் எடுக்கின்றனர். ஜோத்பூரில் படப்பிடிப்புக்காக அரங்கு அமைத்து ஆக்ஷன் சொல்லும் நேரத்தில் கடுமையாக மணல் புயல் அடித்துள்ளது. கூடாரத்தில் நுழைந்து சேதாரமில்லாமல் படக்குழு தப்பித்துள்ளது.
webdunia
படப்பிடிப்புக்காக போடப்பட்ட அரங்கு நாசமானாலும், யாருக்கும் காயமில்லை. லட்சங்கள் போனால் என்ன... யாருக்கும் காயமில்லாமல் தப்பித்ததே ஆறுதல் என்று ட்வீட்டியிருக்கிறார் அனுஷ்கா.

Share this Story:

Follow Webdunia tamil