Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராணி முகர்ஜியை ஏமாற்றிய மர்தானி

ராணி முகர்ஜியை ஏமாற்றிய மர்தானி
, புதன், 27 ஆகஸ்ட் 2014 (11:01 IST)
சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலை போலீஸ் அதிகாரியான ராணி முகர்ஜி துரத்திப் பிடிப்பதுதான் மர்தானி படத்தின் கதை. ராணி முகர்ஜி இந்தப் படத்துக்காக சண்டையெல்லாம் போட்டார். படம் ஹிட்டாகும், மர்தானி இரண்டாம் பாகம் எடுப்போம் என்றெல்லாம் படம் வெளியாகும் முன் கூறி வந்தார்.
சரி, படம் எப்படி?
 
படம் நன்றாகதான் ஆரம்பிக்கிறது. ஆனால் போகப் போக ராணி முகர்ஜியின் வெற்று அடிதடியுடன் சுவாரஸியமில்லாத திரைக்கதையுடன் அலுப்பாக நகர்கிறது. அவர்கள் எதிர்பார்த்த வசூலும் இல்லை.
 
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம் அன்று 3.46 கோடிகளையும், சனி 4.79 கோடிகளையும், ஞாயிறு அதிகபட்சமாக 6.21 கோடிகளையும் வசூலித்தது. பரவாயில்லை, வசூல் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது என்று மகிழ்ச்சியடைய முடியாது. காரணம், திங்கள்கிழமை படத்தின் வசூல் 2.44 கோடிகளாக கீழிறங்கியது. திங்கள்வரை இதன் வசூல் 16.89 கோடிகள் மட்டுமே. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் 21.14 கோடிகள்.
 
இனியும் இரண்டாம் பாகம் பற்றி பேசுவார் ராணி முகர்ஜி...?
 

Share this Story:

Follow Webdunia tamil