Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமியார் பிரச்சனை! தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் ஐஸ்வர்யா ராய்?

மாமியார் பிரச்சனை! தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் ஐஸ்வர்யா ராய்?
, வியாழன், 21 நவம்பர் 2013 (15:43 IST)
இந்தி நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் இது!! அமிதாப், ஜெயா பச்சன் வீட்டிலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன்.
FILE

காரணம்? மெகா சீரியல் காரணம்தான்! மாமியார் பிரச்சனை! அதாவது மாமியார் ஜெயாபச்சன் ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிட்டு சுதந்திரத்தைக் காலி செய்கிறார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜெயபச்சன் ஒன்றும் கொடுமை படுத்தவில்லை. மாறாக

webdunia
FILE
ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கூடுதலாக அக்கறை எடுத்துக் கொள்வது பெரும் இடைஞ்சலாக இருக்கிறது என்று ஐஸ் உணர்கிறாராம்.

இதனால் அபிஷேக் பச்சன், குழந்தை ஆரத்யாவுடன் தனியே செல்ல முடிவே எடுத்து விட்டதாக பறைசாற்றுகிறது அந்தப் பத்திரிக்கை.

ஜெயா பச்சன் போல் இல்லையாம் மாமனார் அமிதாபும் கணவர் அபிஷேக்கும்! ஐஸ்வர்யா ராயிற்கு இவர்கள் இருவரும் முழு சுதந்திரம் அளித்துள்ளார்களாம்.

பாலிவுட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராய் அனைத்து விவரங்களையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவேன்டும் என்று மாமியார் ஜெயா பச்சன் நினைக்கிறாராம். இது பெரிய இடைஞ்சலாக உள்ளதாக ஐஸ் உணர்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil