Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மர்டர் 3 - வாய்ப்பை மறுத்த ஈஷா குப்தா

மர்டர் 3 - வாய்ப்பை மறுத்த ஈஷா குப்தா
, வியாழன், 21 ஜூன் 2012 (18:55 IST)
நிறைய செக்ஸ், கொஞ்சம் த்‌ரில்... இதுதான் மகேஷ் பட் படங்களின் ஃபார்முலா. முக்கால்வாசிப் படங்கள் ஹாலிவுட்டின் அப்பட்ட காப்பியாக இருக்கும். தாய்லாந்து, கொ‌ரியா என்று காப்பியின் திசைகள் சமீபமாக வி‌ரிவடைந்துள்ளன.

இந்த செக்ஸ், த்‌ரில்லர் காம்பினேஷனுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் மர்டர். மல்லிகா ஷெராவத் இந்தப் படத்துக்குப் பிறகே பிரபலமானார். இதன் மூன்றாம் பாகம் இப்போது தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஈஷகுப்தா என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

மகேஷ் பட்டின் முதல் சாய்ஸ் ஈஷகுப்தாவாகதான் இருந்தது. ஆனால் தனது பேவரைட் எழுத்தாளர் ஷகுப்;தா ரபீஃக் மர்டர் 3 கதையை எழுதாததால் ஈஷகுப்தா அந்தப் படத்தில் நடிக்க மறுத்தார் என செய்தி வெளியிட்டன மும்பை பத்தி‌ரிகைகள். இதனை ஈஷா மறுத்திருக்கிறார்.

மகேஷ் பட் மர்டர் 3 படத்தில் நடிக்க கேட்டது உண்மை என்று ஒப்புக் கொண்டிருக்கும் ஈஷகுப்தா, ராஷ் 3 மற்றும் பிரகாஷ் ஜா-வின் சக்கரவியூ படங்களில் பிஸியாக இருந்ததால் மகேஷ் பட் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியவில்லை. இதுதான் மர்டர் 3-யில் நடிக்காததற்கு காரணமே தவிர ரஃபீக் கதை எழுதாதது அல்ல என தெ‌ளிவுபடுத்தியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil