Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ஏன் இந்திப் படத்தை தயாரிக்கிறேன்? ரஹ்மான் விளக்கம்

நான் ஏன் இந்திப் படத்தை தயாரிக்கிறேன்? ரஹ்மான் விளக்கம்
, வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (17:52 IST)
ஏ.ஆர்.ரஹ்மான் தனது நெடுநாளைய விருப்பமான, படம் தயாரிப்பதை விரைவில் நிறைவேற்ற இருக்கிறார். அவர் எழுதிய கதையை அவரே தயாரிக்கிறார். இந்தியில் அவர் தயாரிக்கும் முதல் படம் தயாராகிறது.
என்னிடம் வரும் இயக்குனர்கள் தங்களின் பார்வையை என்னிடம் கூறுவார்கள். ஒரு மகிழ்ச்சியான பாடல், ஒரு சோகப் பாடல், ஒரு நடனப் பாடல் என்று கேட்டு வாங்குவார்கள். இசை குறித்த என்னுடையப் பார்வை இவற்றுக்கு கீழே அமுங்கிப் போயிருக்கும். சொந்தமாக படம் தயாரிக்கும் போது இசை குறித்த என்னுடைய பார்வையை முன் வைக்க முடியும் என்று தான் தயாரிப்பாளரானதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
 
இசை ஆல்பங்கள் தயாரித்தது படம் தயாரிப்பதற்கான முன் தயாரிப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
தனது முதல் படத்தை இந்தியில் தயாரிப்பதற்கான காரணத்தையும் அவர் கூறினார். காரணம் சிம்பிள். ரஹ்மான் எழுதியிருப்பது ஒரு வடஇந்திய கதை. 
 
தனது பார்வையை பிரதிபலிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் இயக்குனர்களை ரஹ்மான் தேடி வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil