Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபிநந்தன் இந்தியா வந்தாச்சு!! அடுத்து என்ன நடக்கும்?

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (18:18 IST)
பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இந்தியா வந்தடைந்தார். அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு, 
 
1. முதலில் அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.
 
2. செஞ்சிலுவை சங்கம் அபிநந்தனிடம் மருத்துவப் பரிசோதனை செய்து, அவருக்கு ஏதும் உடலால் தீங்கிழைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை நடத்தும். 
 
அவருக்கு ஏதேனும் மருந்து தரப்பட்டுள்ளதா? உடல் ரீதியாக, மன ரீதியாக அவர் துன்புறுத்தப்பட்டுள்ளாரா? என்று ஆராய்ந்து செஞ்சிலுவை சங்கம் அறிக்கை தரும். இது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அவசியமானதாகும்.
 
3. இந்தப் பரிசோதனைக்குப் பிறகு அவர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படுவார்.
 
4. விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். 
 
5. அதன் பிறகு ராணுவ உளவு பிரிவு அபிநந்தனிடம் முழுமையாக விசாரணை நடத்தும். அவருக்கு என்ன நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? பாகிஸ்தானில் அவருக்கு நடந்தது என்ன? அவர்கள் என்ன பேசினார்கள். இவர் என்ன பேசினார் என்பவை முழுமையாக விசாரிக்கப்படும்.
 
6. பின்னர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவருக்கு ஆட்சேபகரமாக ஏதேனும் நடந்திருந்தால் அது பற்றி ஐநாவில் இந்தியா முறையிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments