Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிரியா அகதிகளிடம் வெடி பொருட்கள்: துருக்கி குற்றச்சாட்டு

சிரியா அகதிகளிடம் வெடி பொருட்கள்: துருக்கி குற்றச்சாட்டு
, புதன், 10 பிப்ரவரி 2016 (20:45 IST)
சிரியாவிலிருந்து துருக்கிக்குள் வர முயன்ற குழுவொன்றின் பைகளில் இருந்து வெடி பொருட்களையும் நான்கு தற்கொலை அங்கிகளையும் தாம் கைப்பற்றியுள்ளதாக, துருக்கியப் படையினர் கூறுகிறார்கள்.
 

 
இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் உட்பட 34 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும், துருக்கியப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு கர்காமிஸ் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அலப்போ நகரின் அருகே சிரியாவின் அரச படையினர் மேற்கொண்ட மிகப்பெரிய ஒரு தாக்குதலில் இருந்து தப்பி ஓடிய இலட்சக்கணக்கான மக்கள், துருக்கியின் மற்றோர் எல்லையில் கூடியுள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil