Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துனீசியா: 'அருங்காட்சியகத்தை தாக்கிய' ஆயுதக்குழு மீது தாக்குதல்

துனீசியா: 'அருங்காட்சியகத்தை தாக்கிய' ஆயுதக்குழு மீது தாக்குதல்
, ஞாயிறு, 29 மார்ச் 2015 (18:30 IST)
துனீசியாவில் மேற்கே, காஃப்ஸா பிராந்தியத்தில் அரச படையினர் நடத்திய தாக்குதல் நடவடிக்கையில் 9 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒக்பா இப்ன் நஃபா என்ற இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
நாட்டின் 'மிகவும் அபாயகரமான பயங்கரவாதி' என்று வர்ணிக்கப்படுகின்ற லோக்மான் அபு சக்ரா என்பவரும் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
தலைநகர் துனீஸில் அருங்காட்சியகம் ஒன்றின்மீது அண்மையில் தாக்குதல் நடத்தியவர்களும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களே என்று அரசாங்கம் நம்புகின்றது.
 
அந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
 
துனீஸ் நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான பேரணி ஒன்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil