Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி

Webdunia
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளை ஒரு நபர் ஆன்லைன் மூலம் 34 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கடந்த திங்களன்று இணையதளம் ஒன்றின் மூலமாக ஒரு பழைய சோஃபாவை விற்பதற்கான விளம்பரத்தை செய்துள்ளார்.
 
அதை வாங்க முன் வருவதாகக் கூறிய நபர் ஒருவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா அளித்திருந்த வங்கிக் கணக்கில் சிறிய தொகை ஒன்றை  செலுத்தியுள்ளார்.
 
அதன் பின்னர் அந்த சோஃபாவை வாங்குவதற்கு அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கூறிய தொகையைத் தருவதாக கூறி க்யூ.ஆர் கோடு (QR Code) ஒன்றை  ஸ்கேன் செய்யுமாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் அவரது கணக்குக்கு மாறியது. இது குறித்து ஹர்ஷிதா கேள்வி எழுப்பிய பொழுது தவறாக  வேறு க்யூ.ஆர் கோடு அனுப்பி விட்டதாகவும் புதிய க்யூ.ஆர் கோடு ஒன்றை ஸ்கேன் செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.
 
இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்தபோது 14,000 ரூபாய் அவரது கணக்கிலிருந்து பறிபோனது.
 
ஹர்ஷிதா அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments