Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய தாக்குதல்களின் வேகம் குறைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம் தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (10:04 IST)
யுக்ரேன் இராணுவம் மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 24:00 (22:00 GMT) முதல் கணக்கெடுத்துக் கொள்ளப்படும், அதன் சமீபத்திய "செயல்பாட்டுத் தகவலை" வெளியிட்டது.


அதில் ரஷ்ய படையெடுப்பின் 13 ஆம் நாளின் சுருக்கத்தை வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில், "ரஷ்யா படையினரின் நடவடிக்கை குறைந்துள்ளது, மேலும் பொது மக்களின் உட்கட்டமைப்புகளை ஏவுகணை மற்றும் குண்டுகளால் தாக்குவதே அவர்களின் முதன்மையாக உள்ளது" என்று யுக்ரேனின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கீயவ், சுமி, கார்ஹிவ், மேரியோபோல் , மைகோலாயிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்து கைப்பற்றுவதில் ரஷ்யா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், ரஷ்யாவிற்கும், இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்திற்கும் இடையே நில வழித்தடத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் அது கூறியது.

ரஷ்ய ராணுவம் தொடர்ந்து கணிசமான இழப்பை சந்தித்து வருவதாகவும், " குழாய்களின் வலையமைப்பை" அமைப்பதன் மூலம் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அது கூறியது. இந்த அறிக்கை பிபிசியால் சரி பார்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments