Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா - துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது?

Webdunia
வியாழன், 5 மார்ச் 2020 (15:28 IST)
வெடிகுண்டு சத்தத்திற்கு சிரிக்க பழகிய குழந்தையின் குடும்பம் பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
அண்மையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த காணொளியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒரு தந்தையான அப்துல்லா முஹம்மத் தன் குழந்தை சல்வாவுக்கு குண்டுகளின் சத்தத்திற்கு சிரிக்க கற்றுக் கொடுப்பார். அந்த காணொளி அனைவரது மனதையும் அசைத்து பார்த்தது.
 
இதனை அடுத்து அந்த குடும்பம் எல்லையைக் கடக்க துருக்கி அரசாங்கம் உதவியது. துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனை அடுத்து ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சிரியா- துருக்கி எல்லையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 
 
அப்துல்லாவும் அவரது மூன்று வயது மகள் சல்வாவும் பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாகவும், தெற்கு துருக்கியில் உள்ள ஒர் அகதிகள் முகாமும் அழைத்து செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments