Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (23:37 IST)
24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.
 
இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.
 
இந்த அறிக்கை வெளிவந்ததில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமப் பங்குகள் விலை சரியத் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்பு வரை உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்தவர் கெளதம் அதானி.
 
ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வந்த 10 நாட்களுக்குள், முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் கூட இவர் பெயர் இல்லை. இது தவிர ரூ.20,000 கோடி மதிப்பிலான எஃப்பிஓ பங்கு வெளியீட்டையும் கெளதம் அதானி ரத்து செய்தார். நிறுவனம் பெரும் நஷ்டத்தில் உள்ளது.
 
இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதை என்ன? ஹிண்டன்பர்க் ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ளவர் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடலாம்.
 
1937 ஆம் ஆண்டு - ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் ஹிண்டன்பர்க் என்ற ஒரு விண்கலம் இருந்தது.
 
விண்கலத்தின் பின்புறம் நாஜி சகாப்தத்தை குறிக்கும் ஒரு ஸ்வஸ்திகா சின்னம் பொறிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்சியில், பூமியிலிருந்து இந்த விண்கலத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்போதுதான் அசாதாரணமான காட்சி ஒன்றைக் கண்டனர்.
 
ஒரு பெரும் வெடி சத்தத்துடன் வானத்தில் ஹிண்டன்பர்க் விண்கலம் தீப்பிடித்தது. மக்களின் அலறல் சத்தம் கேட்டது. விண்கலம் தரையில் விழுந்தது. 30 வினாடிகளுக்குள் பெரும் அழிவு.
 
உள்ளூர் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிலர் காப்பாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர்.
 
எரியும் விண்கலத்தின் புகை வானத்தை சூழ்ந்து, பகலில் இரவை உருவாக்கியது. இப்போது எஞ்சியிருப்பது விண்கலத்தின் எச்சங்கள் மட்டுமே.
 
இந்த விண்கலத்தில் 16 ஹைட்ரஜன் வாயு பலூன்கள் இருந்தன. விண்கலத்தில் ஏறக்குறைய 100 பேர் கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
 
இதற்கு முன்பும் ஹைட்ரஜன் பலூன்களால் விபத்துகள் நடந்துள்ளன என்றும், அவற்றிலிருந்து பாடம் கற்றிருந்தால், இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
 
ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?
7 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ் - சொன்ன காரணம் என்ன?
2 பிப்ரவரி 2023
அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?
30 ஜனவரி 2023
பங்குச் சந்தை பாடம் கற்றதா?
அதானி ஹிண்டன்பர்க்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கௌதம் அதானி குறித்த அறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் பெயரும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது தான்.
 
“ஹிண்டன்பர்க் சம்பவத்தின் அடிப்படையில், பங்குச் சந்தையில் ஏற்படும் முறிவுகள் மற்றும் இடையூறுகளை நாங்கள் கண்காணிக்கிறோம். அவற்றை அம்பலப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வதே எங்களின் நோக்கம்.
 
ஹிண்டன்பர்க் விபத்தில் மக்கள் பாதிக்கப்பட்டதால், இது போன்ற நிதி விபத்துகள் அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்கச் செயல்படுகிறோம்” என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.
 
அதானி மீதான அறிக்கை போன்ற ஓர் அறிக்கை ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எப்படித் தயார் செய்யப்படுகிறது? இது குறித்த தகவல்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ளன. தனது முறைகளை இந்நிறுவனம் பின்வருமாறு விளக்குகிறது:
 
பகுப்பாய்வின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகள் வழங்கப்படுகின்றன
புலனாய்வு செய்யப்படுகிறது
பெறப்பட்ட ரகசியத் தகவல்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது
ஹிண்டர்ன்பர்க் தனது நிறுவனம் குறித்துக் கூறுவது என்ன?
அதானி ஹிண்டன்பர்க்
பட மூலாதாரம்,NURPHOTO
தனக்குப் பல தசாப்தங்களாக முதலீட்டு அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் கூறுகிறது.
 
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதன் அறிக்கைகள் மற்றும் பிற வகை நடவடிக்கைகளின் மூலம் முன்னரும் பல நிறுவனங்களின் பங்கு விலைகளை விழச் செய்ததாகத் தனது இணையதளத்தில் கூறுகிறது.
 
அதானிக்கு முன், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட பெரிய நிறுவனம் டிரக் நிறுவனமான நிகோலா. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தபோது, நிகோலா நிறுவனத்தின் நிறுவனர் குற்றவாளி என தீர்ப்பானது.
 
ஹிண்டன்பர்க், 2020 ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.
 
அடுத்த ஆறு மாதங்களில் இந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 26 சதவீதத்துக்கும் மேல் சரிவைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
ஹிண்டன்பர்க் தனது இணையதளத்தில் செப்டம்பர் 2020 முதலான தனது அறிக்கைகளின் பட்டியலையும் வழங்கியுள்ளது.
 
ஹிண்டன்பர்க் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கிறது:

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments