Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:22 IST)
வாக்களிக்க செல்லும் முன்னர் தமது கைகளை சுத்தப்படுத்த சேனிடைசர் பெறும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இன்று காலை 7 மணி மற்றும் 8 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலைக்கு முன்னர் முழுமையான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments