Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (09:16 IST)
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் ரூபாய் 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதுள்ளதாக 'தி ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த பங்களிப்பில் 43,964 கோடி ரூபாய் பணமாகவும், சுமார் 1.2 லட்சம் கோடி பணம் சாராத பங்களிப்பாகவும் வழங்கப்படுகிறது. பணம் சாராத பங்களிப்பில் ரூ.44,993 கோடி ரூபாய் மதிப்புள்ள 4G அலைக்கற்றை ஒதுக்கீடும் அடக்கம்.

பாரத்நெட் என்ற லட்சியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பாரத் பிராண்ட் பேண்ட் நெட்வொர்க் (பி.பி.என்.எல்.) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல்லுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.

இது தொடர்பான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில் இந்த தொகையின் ஒரு பகுதியை முதலீடாக பி.எஸ்.என்.எல்.லுக்கு மத்திய அரசு வழங்கும் எனவும், இதனைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ளும். மற்றொரு பகுதி நிதியின் மூலமாக இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் என தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையசேவை வழங்கவும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இந்த நிதி பயன்படும் என தெரிவித்ததாக தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments