Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா போர்: இரான் ராணுவத்தினர் பலர் பலி...

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:18 IST)
சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் பலரும் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்களில் உள்ள தளங்களில் தாக்கப்பட்டுள்ளதாக சிரிய ராணுவம் கூறியுள்ளது.
 
உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், அரசு சார்புடைய 26 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் இரானியர்கள் என்றும் பிரிட்டனை சேர்ந்த கண்காணிப்புக்குழு கூறுகிறது.
 
தாக்குதல்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிய வரவில்லை. முன்னதாக மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் சிரியாவை தாக்கியுள்ளன.
 
சிரியாவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரயா மீது குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தின.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments