Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சிறை அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

Webdunia
புதன், 8 அக்டோபர் 2014 (08:22 IST)
சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் டி.என்.உபுல்தெனிய தெரிவித்தார்.


 
அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இலங்கையில் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நின்றுபோயிருந்தன.
 
கொழும்பு, மகஸின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் பணிபுரியும் சிறை அதிகாரிகளே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
“கண்மூடித்தனமான இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு” கோரி இந்த வேலைநிறுத்தத்தை தாங்கள் ஆரம்பித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் முழுமையாக தடைபட்டிருந்தன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments