Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை எரித்துக் கொன்ற தெற்கு சூடான் இராணுவம்

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (20:23 IST)
தெற்கு சூடான் இராணுவத்தினர் டஜன் கணக்கான சிறுமிகளை குழுவாக பாலியல் வல்லுறவு செய்து பின்னர் அவர்களின் வீடுகளுக்குள் தள்ளி உயிருடன் எரியூட்டிக் கொன்றதாக ஐநா சபை தெரிவித்திருக்கிறது.
 

 
தெற்கு சூடான் அரசாங்கத்திற்கும், அரசுக்கு எதிரான கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையே சண்டை உக்கிரமாக நடைபெற்ற அந்த நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்திலேயே இத்தகைய துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளதாக அங்குள்ள ஐநா அலுவலகம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
கிளர்ச்சிக்குழுவினரின் இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிக்கும்படி ஒரு பெண்ணை நிர்பந்திப்பதற்காக கனன்று கொண்டிருந்த நிலக்கரி அவரது கைகளில் ஏந்தும்படி செய்யப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிளர்ச்சியாளர்கள் சிறுவர்களை போராட்டத்தில் சேர்த்துக் கொண்டதாகவும், பாலியல் வல்லுறவு புரிந்ததாகவும் கொலைகள் செய்ததாகவும் ஐநா குற்றம் சாட்டியிருக்கிறது.
 
ஐநாவின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை எந்த தரப்பும் பதிலளிக்கவில்லை.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!