Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியா: திறக்கப்பட்ட 2 நாட்களில் மூடப்பட்ட பள்ளிகள்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (14:46 IST)
தென் கொரியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், அங்கு 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 56 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
 
பெரும்பாலான புதிய தொற்றுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய இணைய வணிக நிறுவனமான கூப்பாங்கிற்கு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ளது. புச்சியோன் பகுதியில் உள்ள இந்த கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களின் உடைகள் மற்றும் காலணிகளில் இருந்து கொரோனா வைரஸை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
 
இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் உள்ள மற்ற சேமிப்பு கிடங்கில் பணியாற்றுபவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
 
புச்சியோன் பகுதியில் திறக்கப்பட்ட 251 பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது. தலைநகர் சொலில் ஒரு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரது தாய் கூப்பாங் சேமிப்பு கிடங்கில் பணியாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments