Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றங்களில் ஈடுபடும் மூத்த ஜப்பான் குடிமக்கள்...

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:29 IST)
அனாதையாக விட்டுச்செல்லும் குழந்தைகளால் வழி தெரியாது நிற்கும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜப்பானில் நிலவும் வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் திருடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
 
உதாரணமாக, பெயர் வெளியிட விரும்பாத ஜப்பானிய பெண்ணொருவர் தனக்கு 53 வயதானபோது, குழந்தை பள்ளிக்கு செல்ல மறுத்ததால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புத்தகப்பை ஒன்றை திருடியபோது பிடிபட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்ததாக கூறுகிறார்.
 
மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு தற்போது 68 வயதாகும் நிலையில், தனக்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் அதை திருடியபோது பிடிபட்டு ஐந்தாவது முறையாக சிறைவாசத்தை அனுபவித்தார்.
 
இவ்வாறாக, ஜப்பானில் நிலவும் வேலையின்மை, பெற்றெடுத்த குழந்தைகளின் ஆதரவின்மை ஆகியவற்றின் காரணமாக மூத்தகுடிமக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments