Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யப்படைகளால் எங்கும் முன்னேற முடியவில்லை - யுக்ரேன்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (17:26 IST)
ரஷ்யப்படைகள் மீண்டும் ஒருங்கிணைந்திருப்பதாகவும், ஆனால், யுக்ரேனில் அவர்களால் எங்கும் முன்னேற முடியவில்லை எனவும், யுக்ரேன் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மால்யர் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யப்படைகள் தாங்கள் ஏற்கெனவே கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களின் நிலையை வலுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், கீயவை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், ஆனால், "தலைநகரை கைப்பற்றுவதில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

"எதிரிப்படைகள் (ரஷ்யப்படைகள்) மீண்டும் ஒருங்கிணைந்துள்ளன, ஆனால், அவர்களால் யுக்ரேனில் எங்கும் முன்னேற முடியவில்லை," என, அவர் தெரிவித்தார்.

அதிகரித்துவரும் இழப்புகளுக்கு மத்தியில், செர்னோபில் வாயிலாக ரஷ்ய ராணுவக் குழுக்கள் பெலாரூஸில் ஒன்றிணைந்துள்ளதாக, யுக்ரேன் ஆயுதப்படை தளபதி முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீயவை சுற்றி வளைக்கும் முயற்சிகளை வலுப்படுத்த ரஷ்யப்படைகள் திரும்பலாம் எனவும், அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments