Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜீன் 27 ஆம் தேதி இடைத்தேர்தல்

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (18:37 IST)
தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கு, வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
 
இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 
இதையடுத்து தற்போது இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
ஜூன் 3ஆம் தேதியன்று வேட்பமனுத் தாக்கல் துவங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூன் பத்தாம் தேதி இறுதிநாள்.
 
11 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். 13 ஆம் தேதி வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம்.
27ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். 30 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
இந்தத் தொகுதி மட்டமல்லாமல், மேகாலயா, கேரளா, திரிபுரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வேறு 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 27ஆம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.
 
முன்னதாக ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டிருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதற்குப் பின் மேல் முறையீட்டில், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் தமிழக முதலமைச்சராக கடந்த 23 ஆம் தேதியன்று பதவியேற்றார்.
 
அதற்கு முன்பாகவே, அதிமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

Show comments