Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபன் தலைவர் முல்லா ஒமருக்கு ஆப்கன் அதிபர் நன்றி கூறினார்

Webdunia
சனி, 18 ஜூலை 2015 (14:12 IST)
தாலிபன்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தும் கொள்கையை ஏற்றுக்கொண்டமைக்காக தாலிபனின் ஒதுங்கிவாழும் தலைவர் முல்லா ஒமருக்கு ஆப்கன் அதிபர் அஸ்ரப் கானி பகிரங்கமாக நன்றி கூறியுள்ளார்.
 

 
முல்லா ஒமர் இந்த வாரம் வெளியிட்டிருந்த செய்தி, அமைதி வழிக்கானது என்று தனது ஈத் உரையில் அதிபர் அஸ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
 
தாலிபன்கள் மற்றைய கிளர்ச்சிக் குழுக்களை விட வித்தியாசமானவர்கள் என்றும், 'கட்டமைப்புக்குள் சேர்ந்து இயங்க விரும்புபவர்கள்' என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனினும், மேற்கு ஆப்கானிஸ்தானில் வீதியோரக் குண்டொன்று வெடித்ததில் ஆறு காவல்துறையினர் கொல்லப்பட்ட சம்பவம் அடங்கலாக அண்மைக் காலத்தில் பல தாக்குதல்கள் அங்கு நடந்துள்ளன.

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments