Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ராணுவ அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - ராணுவ உயரதிகாரியிடம் விசாரணை

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:27 IST)
இந்து தமிழ் - "பெண் ராணுவ அதிகாரிக்கு வன்கொடுமை - மேஜரிடம் விசாரணை"
 
 
பெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
 
"பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி மையத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது.
 
அந்த விருந்து முடிந்த பிறகு, மேஜர் அமித் சவுத்ரி என்பவர் தன்னுடன் பணியாற்றும் 29 வயதான பெண் அதிகாரியை வீட்டில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.
 
மது போதையில் இருந்த அவர், பழைய விமான நிலைய சாலையில் காரை நிறுத்தி, பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
 
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அதற்கு மறுநாள் இந்த சம்பவம் குறித்து தமது ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இச்சம்பவம் தொடர்பாக விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அமித் சவுத்ரிக்கு மார்ச் 23-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யவில்லை" பெங்களூரு மாநகர கிழக்கு உதவி ஆணையர் ராகுல் குமார் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்