Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்க் கைதிகள் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2016 (19:56 IST)
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்ற 14 தமிழ்க் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று திங்களன்று நடத்தப்பட்டிருக்கின்றது.


 

 
மன்னார் பிரஜைகள் குழுவின் அழைப்பில் இந்தப் போராட்டம் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றுள்ளது.
 
குற்றச்சாட்டுக்கள் எதுவுமற்ற நிலையில், வழக்கு விசாரணைகளின்றி வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் மூலம் கோரப்பட்டிருக்கின்றது.
 
மன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள், தமிழ்க் கைதிகளின் குடும்ப உறவினர்கள், அரசியல்வாதிகள், அருட் சகோதரிகள், அருட் தந்தையர் என பலதரப்பட்டவர்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
 
பதின்மூன்றாவது நாளாக தமிழ்க் கைதிகள் 14 பேரும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் மூவரின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

Show comments